Monday, December 19, 2016

நோய்வாய் பட்ட சேவலை தயார் பன்னுவது எப்படி?



(குறிப்பு: நோய் பட்ட சேவல் தயார் பன்னுவது பற்றி கடைசி பத்தியில் இருக்கும்)
  உங்கள் பண்ணையிலோ ஆல்லது தோட்டத்திலோ அல்லது வீட்டினிலோ நீங்கள் வளர்க்கும் சேவலின் ஆரோக்கிமே முதன்மையானது ஏனெனில் உங்கள் பண்ணையின் ராஜா சேவல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற கோழிகள் ஆரோக்கியமாக இருக்க முடியும்..
நோய் பரவுவதற்க்கு முக்கிய காரணம் சேவல்தான்....முதலில் சேவலிற்க்குதான் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகம் என்பதால் சேவலின் ஆரோக்கியம் பெரிதும் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைகிறது.

சரி விசியத்திற்க்கு வருவோம்...
1. எந்தெந்த காலங்களில் நோய் தொற்று அதிகம் இருக்கும்= 1.குளிர்காலம் தொடக்கத்தில், 2. வெயில் காலத்தின் மத்தியப்பகுதில்.. பொதுவாகவே இந்த இரு காலங்களில் நோய் தொற்றுக்கு மிக அதிக வாய்ப்பு உண்டு...

2. நோய் தொற்றினை தடுக்க என்ன செய்யலாம்..
   1.பனிகாலத்தில் உங்கள் சேவலை பனியின் நேரடி தாக்கம் இல்லாதவாறு ரூம் அமைத்து இரவு நேரத்தில் பனியிலிருந்து பாதுகாக்கலாம்..
2. வெயில் காலத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க ஒரு சிரு வீட்டுத்தோட்டப்ப பயிர் வளர்ப்பதின் மூலம் பாதுக்காக்கலாம்..
3. என்னதான் நாம் பாதுகாத்து வந்தாலும் உணவு சரியான முறையில் தரவேண்டும்....எடுத்துக்காட்டு கம்பு...கம்பு கொடுத்து வந்தால் செரிமான சிக்கலால் வரும் வெள்ளைக்கலிச்சல் நோயை முற்றிலுமாக தடுக்க இயலும்....
4. தயவு செய்து அரிசியை மட்டும் தீவனமாக தர வேண்டாம்...இது வெயில் காலத்தில் செரிமான சிக்கலை ஏற்படுத்தி பின் வெள்ளைக்கலிச்சல் நோயாக மாற்றம் அடையும்..
5.அடுத்து முக்கியமான ஒன்று ஏதேனும் ஒரு நோய் தடுப்பு முறையை பயன்படுத்தவும்...எடுத்துக்காட்டாக செயற்கை தடுப்பூசி ஆர்.டீ.வி.கே. , ஆர்.டூ.பி., லெசோடா, அல்லது இயற்கை வழியில் நாட்டு மருந்துகள் கொடுத்து வரவும்.....

கடைசியான உங்களுங்கு எழும் சந்தேகம் இதுதான்...எல்லாத்தையும் சரியாக செய்தும் வருதே......
அப்படியும் சேவலிற்க்கு நோய் தொற்று ஏற்பட்டு சேவல் கிரங்கினாலும் அந்த சேவலை 90% காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது...அது என்ன எப்படி என்பதை பார்ப்போம்...

நோய்கண்ட சேவலை முதில் தனிமை படுத்த ஒரு ரூம் ரெடி பன்னி அதில் இரண்டு100வாட்ஸ் குண்டு பல்ப்பை கட்டி தொங்க விடவும் அந்த ரூமில் 24 மணிநேரமும் பல்ப் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த ரூமின் வெப்ப நிலை எப்பாதும் 40டிகிரி செல்சியஸில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்...
சேவலை அந்த ரூமில் அடைத்து வைத்து மருத்துவம் செய்ய வேண்டும் ....
உங்களுக்கு காய்ச்சலோ சலியோ பேதியோ வந்தால் என்ன மாத்திரை தருவீர்களோ அதையே நோய்க்கு ஏற்றவாரு கொடுக்லாம் ஆனால் கொடு
க்கும் அளவில் மாற்றம் செய்ய வேண்டும் முழு மாத்திரையும் தண்ணீரில் கரைத்து அதில் சிறு அளவு மட்டுமே மருந்தாக கொடுக்கலாம்.... (அதிகமான அளவில் மருந்து கொடுக்க வேண்டாம்).
அதிக நாள் இரையே எடுக்காமல் இருந்தால் சத்து ஏற்பட electrocare என்ற பவுடரை Medicalலில் வாங்கி தரவும்...செரிமானம் ஒழுங்கா நடக்க ஓமம் சிறிது கொடுக்கவும்...காய்ச்சல் சளிக்கு enflox டானிக் தரவும் ..வெறும் வயிராக மட்டும் விட கூடாது.....எனவே இரை சாப்பிடாமல் இருந்தால் வாயில் ஊட்டி விடவும் ...அரை வயிறு இரை போதுமானது....இப்படி மூன்று நாளைக்கு கவனித்து வந்தால் நிச்சியம் குணமடையும்....

சென்ற மாதத்தில் மட்டும் இது பற்றி என்னிடம் 4 நண்பர்கள் கேட்டு 4 சேவலை தயார் செய்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிக்க கடமை பட்டுள்ளேன் ...
நன்றி உறவுகளே....

தொடர்வோம் இணைவோம்......

ஆரோக்கியமான கருத்துக்ககள் இங்குவரவேற்க்கப்படுகிறது .....அது நிறைய நண்பர்களை ஊக்குவிக்கும்....
..

என்றும் தோழமையுடன் தொடர்வோம்...
இனி நிறைய பதிவுகள் இட திட்ட மிட்டுள்ளேன்.
இந்த குரூப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள அத்துணை நண்பர்களுக்கும் என் மனம்மார்ந்த நன்றி....
Whatsapp +919894695840

No comments:

Post a Comment